உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு பயணம்!
இரண்டு வார பயணமாக அடுத்த வாரம் ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் செய்யய உள்ளார்.


இரண்டு வார பயணமாக அடுத்த வாரம் ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் செய்யய உள்ளார்.
ஐந்து நாள் பயணமாக வரும் செப்டம்பர் 8-ஆம் தேதிக்கு ரஷ்யா பயணம் செய்யும் ராஜ்நாத் சிங், ரஷ்ய உள்துறை அமைச்சர் விளாதிமிர் கொலோகோல்ட்சேவ்வுடன் இருதரப்பு பேச்சுவாரத்தை நடத்த உள்ளார்.
அதே போல் ரஷ்ய பயணத்தை முடித்த பின்பு, ஒரு வார பயணமாக செப்டம்பர் 26 அன்று அமெரிக்கா புறப்படும் ராஜ்நாத்சிங், இந்திய-அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து, அவரது அமெரிக்க சகா சார்ல ஸ் ஜான்சனுடன் பேச்சு நடதத உள்ளார்.
இந்தஇரண்டு பயணங்களிலும் எல்லை தண்டி இந்தியா மீது ஏவப்பப்டும் பயங்கரவாதத்தில் பாகிஸ்தானின் நேரடி பங்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்துவரும் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் ஆகிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...